என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து முன்னணி பிரமுகர் கொலை: ஈரோட்டில் 4 இடங்களில் சாலை மறியல்- 100 பேர் கைது
    X

    இந்து முன்னணி பிரமுகர் கொலை: ஈரோட்டில் 4 இடங்களில் சாலை மறியல்- 100 பேர் கைது

    இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து ஈரோட்டில் 4 இடங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    கோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு நகரில் இந்த படுகொலையை கண்டித்து 4 இடங்களில் சாலை மறியல் நடந்தது.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே இந்து முன்னணி மாநகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலும், சத்தி ரோட்டில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் கலைசெல்வன் தலைமையிலும் மறியல் நடந்தது.

    இதே போல் பிரப் ரோட்டில் இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சிவா தலைமையிலும், பெருந்துறை ரோட்டில் இந்து முன்னணி பிரமுகர் சங்கர் தலைமையிலும் சாலை மறியல் நடந்தது.

    இதில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் பூசப்பன், பாஜனதா பிரச்சார அணி பொறுப்பாளர் சரவணன், வக்கீல் அணி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×