என் மலர்
செய்திகள்

வேப்பூரில் கள்ளக்காதலன் வீட்டில் இளம்பெண் மர்மச்சாவு: போலீசார் விசாரணை
வேப்பூரில் கள்ளக்காதலன் வீட்டில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள வெண்கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (வயது 20). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்த சுகன்யா தனியாக வசித்து வந்தார். அப்போது சுகன்யாவுக்கும், வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவின் முன்னாள் காதலன் பரமசிவம் என்பவருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.
குடும்ப பிரச்சனை காரணமாக தனியே வசித்து வந்த சுகன்யாவை பரமசிவம் தனது வீட்டிலேயே தங்க வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பரமசிவம் வீட்டில் இல்லாத போது சுகன்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சுகன்யாவின் தந்தை காமராஜ் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுகன்யாவின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள வெண்கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (வயது 20). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்த சுகன்யா தனியாக வசித்து வந்தார். அப்போது சுகன்யாவுக்கும், வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவின் முன்னாள் காதலன் பரமசிவம் என்பவருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.
குடும்ப பிரச்சனை காரணமாக தனியே வசித்து வந்த சுகன்யாவை பரமசிவம் தனது வீட்டிலேயே தங்க வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பரமசிவம் வீட்டில் இல்லாத போது சுகன்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சுகன்யாவின் தந்தை காமராஜ் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுகன்யாவின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






