என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை: ஆ.டி.ஓ விசாரணை
ஈரோடு அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆ.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள ஆணைக்கல் பாளையம் வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி காவியா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. ஒரு மகன் உள்ளான்.
காவியாவுக்கு அடிக்கடி உடல் நலம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் வைத்தியம் பார்த்து வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த நிலையில் அவர் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் காவியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.
Next Story






