என் மலர்
செய்திகள்

காவிரி நதிநீர் பிரச்சினையை கர்நாடக அரசு அரசியல் ஆக்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவேதான் மக்களின் கவனத்தை திசை திருப்பி தோல்வியை மறைத்து காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு படுதோல்வி அடையும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜனதா கலந்து கொள்ளாததற்கு காரணம் பா.ஜனதா இறையாண்மையை மதித்து செயல்படுகிறது. சட்ட திட்டத்துக்கு உட்பட்டு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவேதான் மக்களின் கவனத்தை திசை திருப்பி தோல்வியை மறைத்து காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு படுதோல்வி அடையும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜனதா கலந்து கொள்ளாததற்கு காரணம் பா.ஜனதா இறையாண்மையை மதித்து செயல்படுகிறது. சட்ட திட்டத்துக்கு உட்பட்டு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






