என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமகிரிபேட்டையில் 402 மஞ்சள் மூட்டைகள் ரூ. 20 லட்சத்திற்கு ஏலம்
    X

    நாமகிரிபேட்டையில் 402 மஞ்சள் மூட்டைகள் ரூ. 20 லட்சத்திற்கு ஏலம்

    ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் 402 மஞ்சள் மூட்டைகள் ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் போனது.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. ஏலத்தில் நாமகிரிபேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமகிரிபேட்டை, ஒடுவன்குறிச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

    இந்த ஏலத்தில் விரலி ரகம் 305 மூட்டைகளும், உருண்டை ரகம் 95 மூட்டைகளும், பனங்காலி ரகம் 2 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8,042–க்கும், அதிகப்பட்சமாக ரூ.9,042–க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7,012–க்கும், அதிகப்பட்சமாக ரூ.8,322–க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.18,312–க்கும் அதிகபட்சமாக ரூ.19,315–க்கும் ஏலம் போனது.

    நேற்று நடந்த ஏலத்தில் 402 மஞ்சள் மூட்டைகள் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் அதிக அளவில் ஏலத்திற்கு மஞ்சள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
    Next Story
    ×