என் மலர்
செய்திகள்

வத்தலக்குண்டு அருகே வேலைக்கார பெண்ணை தாக்கிய தம்பதி கைது
வத்தலக்குண்டு அருகே வேலைக்கார பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு காந்திநகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கோமதி. இவர்கள் விளாம்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லதா (வயது 20) என்பவரை கடத்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்த்தனர். லதாவுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை உள்ளது. வீட்டு வேலைக்கு சேர்ந்த லதாவுக்கு கோமதியும், அவரது கணவரும் கடுமையாக வேலை மட்டும் வாங்கி சம்பளம் தராமல் இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று தனது சம்பளத்தை லதா கேட்ட போது கணவன்-மனைவி இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து லதா வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி வழக்கு பதிவு செய்து மணி மற்றும் கோமதியை கைது செய்தனர்.
வத்தலக்குண்டு காந்திநகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கோமதி. இவர்கள் விளாம்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லதா (வயது 20) என்பவரை கடத்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்த்தனர். லதாவுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை உள்ளது. வீட்டு வேலைக்கு சேர்ந்த லதாவுக்கு கோமதியும், அவரது கணவரும் கடுமையாக வேலை மட்டும் வாங்கி சம்பளம் தராமல் இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று தனது சம்பளத்தை லதா கேட்ட போது கணவன்-மனைவி இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து லதா வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி வழக்கு பதிவு செய்து மணி மற்றும் கோமதியை கைது செய்தனர்.
Next Story






