என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே தம்பதியை தாக்கி நகை-பணம் பறிப்பு

திருப்பத்தூர்:
ஜவ்வாது மலையில் உள்ள புதுநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 35). இவர் தனது மனைவி துர்காவுடன் (30) நேற்று மாலை திருப்பத்தூர் ஜே.பி. எம். நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டு இருந்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ள சாமியார் கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது மற்றொரு பைக்கில் 3 பேர் வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ஜெகதீஸ் வந்த பைக் மீது மோதி தடுத்து நிறுத்தினர். இதில் ஜெகதீஸ் அதிர்ச்சி அடைந்து நின்றார்.
அந்த 3 பேரும் ஜெகதீசை சரமாரியாக தாக்கினர். முகத்திலும் குத்தினர். இதில் ஜெகதீஸ் நிலை குலைந்தார்.
அப்போது அந்த 3 பேரும் ஜெகதீஸ் அணிந்திருந்த 1 பவுன் நகையையும், அவர் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
