என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பணிகளை அதிகாரிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்: புதுக்கோட்டை கலெக்டர் பேச்சு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் 2016ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2016 விரைவில் நடைபெறவுள்ளது. இதன்படி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற் பாடு பணி கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் குறித்த விபரம், தேர்தல் தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தடுப்பு வேலிகள் அமைத்திட உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் மற்றும் இம்மையங்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களிடம் தடையின்மை சான்று பெறவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம் சேகரிக்கவும் மற்றும் தகவல் கோப்பு படிவம் தயார் செய்யவும், மேலும் இதன் மூலம் நடை பெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சம்மந்தப் பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






