search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
    X

    காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சிவகங்கை:

    காரைக்குடி பெரிய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிமீனாள் (வயது28). இவருக்கும், சண்முகம் (32) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடை பெற்றது.

    அப்போது 15 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாம். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக, காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் பாண்டிமீனாள் புகார் செய்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி, சண்முகம், அவரது பெற்றோர் சின்னான் (60), மாறத்தி (55), உறவினர் சித்ரா (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    Next Story
    ×