என் மலர்
செய்திகள்

விவசாயிகள் சங்காபிஷேகம் நடத்தி வழிபட்ட காட்சி.
மழை பெய்ய வேண்டி பவானிசாகர் அணை பகுதியில் விவசாயிகள் சங்காபிஷேக பூஜை
பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையில் நீர் மட்டம் உயர வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய சங்கத்தினர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சாகர் விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்கு வைத்து விவசாயிகள் சங்காபிஷேகம் நடத்தினர்.
சத்தியமங்கலம்:
நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறைவாக இருந்ததால் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையில் நீர் மட்டம் உயர வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய சங்கத்தினர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சாகர் விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்கு வைத்து விவசாயிகள் சங்காபிஷேகம் நடத்தினர்.
இதையொட்டி நடந்த யாக பூஜையில் விவசாயிகள் பங்கேற்று மழை பெய்ய வேண்டி வழிபட்டனர். அணையின் நீர்மட்டம் 53.52 அடியாகவும் நீர்வரத்து 164 கனஅடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 70 அடியாகும். நீர்வரத்து 900 கன அடியாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் காசியண்ணன், துணைத் தலைவர் ஆர். செங்கோடன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறைவாக இருந்ததால் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணையில் நீர் மட்டம் உயர வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாய சங்கத்தினர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சாகர் விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்கு வைத்து விவசாயிகள் சங்காபிஷேகம் நடத்தினர்.
இதையொட்டி நடந்த யாக பூஜையில் விவசாயிகள் பங்கேற்று மழை பெய்ய வேண்டி வழிபட்டனர். அணையின் நீர்மட்டம் 53.52 அடியாகவும் நீர்வரத்து 164 கனஅடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 70 அடியாகும். நீர்வரத்து 900 கன அடியாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் காசியண்ணன், துணைத் தலைவர் ஆர். செங்கோடன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story






