search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே மகன்-மகளுடன் தாய் மாயம்: கணவர் புகார்
    X

    வாசுதேவநல்லூர் அருகே மகன்-மகளுடன் தாய் மாயம்: கணவர் புகார்

    வாசுதேவநல்லூர் அருகே மகன்-மகளுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது50), விவசாயி. இவரது மனைவி பிரேமா (வயது45). இவர்களுக்கு வேல்சாமி (19) என்ற மகனும், தமிழ்செல்வி (16) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி இரவு பிரேமா தனது மகன், மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
    உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை காணவில்லை. இதனால் நேற்று கடற்கரை, வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×