என் மலர்
செய்திகள்

மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தற்கொலை
நெய்வேலியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி:
நெய்வேலிடவுன் 15-வது வட்ட சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பில் வசித்து வந்தவர் படே(வயது 30). மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர். இவர் என்.எல்.சி. சி.ஐ.எஸ்.எப். யூனிட் உரஆலை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார், இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில், புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து முயற்சித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், அவரது குடும்பத்தினர் என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே படே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட படேவுக்கு சோனாலி(24) என்ற மனைவியும், பிராச்சி(6) என்ற மகளும், சீனிவாஸ்(4) என்ற மகனும் உள்ளனர். இவரது தாயார் சாயா(50) இவருடன் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரது மனைவி சோனாலி டவுன்சிப் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக படே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
நெய்வேலிடவுன் 15-வது வட்ட சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பில் வசித்து வந்தவர் படே(வயது 30). மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர். இவர் என்.எல்.சி. சி.ஐ.எஸ்.எப். யூனிட் உரஆலை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார், இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில், புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து முயற்சித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், அவரது குடும்பத்தினர் என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே படே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட படேவுக்கு சோனாலி(24) என்ற மனைவியும், பிராச்சி(6) என்ற மகளும், சீனிவாஸ்(4) என்ற மகனும் உள்ளனர். இவரது தாயார் சாயா(50) இவருடன் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரது மனைவி சோனாலி டவுன்சிப் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக படே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Next Story






