என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே தச்சு தொழிலாளி மாயம்
வேதாரண்யம் அருகே தச்சு தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரெகுநாதன் மகன் உதயகுமார் (வயது26). திருமணம் ஆகாதவர், தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுள்ளார். மாலை ரெகுநாதனுக்கு செல்போனில் ஊருக்கு வந்து விட்டேன் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறி உள்ளார்.
ஆனால் அன்று வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லையாம். பல இடங்களில் தேடிப்பார்த்தும், கிடைக்காததால் கரியாப்பட்டினம் போலீசில் ரெகுநாதன் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை தேடி வருகிறார்.
Next Story






