என் மலர்
செய்திகள்

கடலூர் சிறையில் அதிரடி சோதனை: கைதிகளிடம் 2 செல்போன் பறிமுதல்
கடலூர் சிறையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து சிறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது விசாரணை கைதிகளான விருத்தாசலம் மங்கலம்பேட்டையை சேர்ந்த தண்டாயுதபாணி, விழுப்புரம் மாவட்டம் வெளுத்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (27) ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து சிறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது விசாரணை கைதிகளான விருத்தாசலம் மங்கலம்பேட்டையை சேர்ந்த தண்டாயுதபாணி, விழுப்புரம் மாவட்டம் வெளுத்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (27) ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story