search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடியில் ரெயில் மோதி 2 பேர் பலி
    X

    காட்பாடியில் ரெயில் மோதி 2 பேர் பலி

    காட்பாடியில் வெவ்வேறு இடத்தில் ரெயில் மோதி 2 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையம் இன்று அதிகாலை வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது. 1-வது பிளாட்பாரம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டாகி ஆண் பிணம் கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ந்து போயினர்.

    இதுகுறித்து, உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தலை துண்டாகி இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டனர். இறந்தவரின் உடலமைப்பு சுமார் 60 வயது நபரின் தோற்றமாக தெரிந்தது.

    பலியானவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரெயிலில் சிக்கி அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

    தலை துண்டாகி உடல் கிடந்ததால், தண்டவாளத்தில் தலை வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி 66.புதூரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் வீரமணி (வயது 34). இவர் நேற்றிரவு 10 மணியளவில் சேவூர்- திருவலம் இடைப்பட்ட ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக சென்ற ரெயில் வீரமணி மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை தகவலறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர்.வீரமணியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×