என் மலர்
செய்திகள்

வாணியம்பாடியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
வாணியம்பாடியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி குரும்பர் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி ஷைலா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கருத்து-வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 19-ந் தேதியும் தகராறு நடந்தது. அப்போது, ஷைலாவை கணவர் விஜய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷைலா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கி கிடந்த ஷைலாவை கணவர் குடும்பத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷைலா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஷைலாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், திருப்பத்தூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Next Story