search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கிருஷ்ணகிரி அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கு போட்டு தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி கக்கன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ்(26) தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டுக் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குருபரப்பள்ளிபோலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து முனிராஜ் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×