என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பலூர் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் பொறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் கல்வி முறையா? வாழ்க்கை முறையா? அல்லது தொழிற்துட்ப வளர்ச்சியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி அறங்காவலர் ரம்மாதேவிசிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் நரேந்திர பிரசாத் முன்னிலை வகித்தார். மின்னியல் துறைத் தலைவர் கிருஷ்ணராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் இளையராஜா பட்டிமன்ற நடுவராக செயல்பட்டார்.
நிகழ்ச்சியில் கல்வி முறை என்ற தலைப்பில் அருட்செல்வன், சரத்குமார், பிரபாகரன், வாழ்க்கை முறை என்ற தலைப்பில் திருமுருகன், கார்த்திக், சக்திவேல், தொழிற்துட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் ரஞ்சிதா, விஜயபாஸ்கர், குமரேசன் ஆகியோர் பேசினார்.
முடிவில் கல்வி முறையே என தீர்ப்பு அளிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியியல் துறை மாணவர்கள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்