என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை கல்லூரிகளில் நாப்கின் மிஷின் பொருத்தும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜே.சி.ஐ புதுக்கோட்டை கிங்ஸ் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் டெஸ்ட்ராயர் மிஷின் பொருத்தும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் கணேஷ் துவக்கி வைத்து கூறியதாவது:-
ஜே.சி.ஐ வார விழாவினை முன்னிட்டு ஜே.சி.ஐ புதுக்கோட்டை கிங்ஸ் சார்பில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, மவுண்ட்சியோன், டாக்டர்ஸ் நர்சிங் கல்லூரி உட்பட 7 இடங்களில் நாப்கின் டெஸ்ட்ராயர் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சுராக்ஷா எனும் நாப்கின் மிஷின் பொருத்துதல் குறித்தும், உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. எனவே இதனை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவிகளும் உரிய முறையில் பயன்படுத்தி தன் சுகாதாரம் பேண வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) சந்தோஷ்குமார், ஜே.சி.ஐ புதுக்கோட்டை கிங்ஸ் தலைவர் எம்.வீரய்யா, செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வைரவன், மண்டலத்தலைவர் சங்கர நாராயணன், மண்டல துணைத்தலைவர்கள் சேதுரத்தினம், எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், கதிர்வேல், வித்யா, லெட்சுமணன், சண்முக பழனியப்பன், கண்ணன், ஸ்ரீராம், ஸ்ரீனிவாசன், ஜோன்ஸ், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






