என் மலர்
செய்திகள்

வன உயிரின வார விழாவையொட்டி பேச்சுபோட்டி–ஓவியப்போட்டி
அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காடுகளையும், காட்டு விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வன உயிரின வார விழா கடைபிடிக்கபட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி அரசுக்கல்லூரியில் நடத்தப்பட்டது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காடுகளையும், காட்டு விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வன உயிரின வார விழா கடைபிடிக்கபட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி அரசுக்கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக தமிழ்த்துறை பேராசிரியர்கள் சேகர், தமிழ்மாறன் மற்றும் இயற்பியல்துறை பேராசிரியர் ராசமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். பேச்சுபோட்டி, ஓவியப்போட்டிகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் வருகிற 8–10–2016 அன்று சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
வன உயிரின வார விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக தமிழ்த்துறை பேராசிரியர்கள் சேகர், தமிழ்மாறன் மற்றும் இயற்பியல்துறை பேராசிரியர் ராசமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். பேச்சுபோட்டி, ஓவியப்போட்டிகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் வருகிற 8–10–2016 அன்று சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
வன உயிரின வார விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story






