என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்த பெண் பலி
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, சேதுசாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வி (45). இவர் கடந்த 9-ந்தேதி தனது மகள் சித்ராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அகஸ்தியன்பள்ளி மாரியப்பன் மனைவி வனிதா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்வி மீது மோதியதில் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார்.
அவருக்கு உள்ளுரிலேயே நாட்டு வைத்தியம் செய்துள்ளனர். இதில் செல்வி உடல்நிலை மோசமானதால் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை சிகிச்சை அளிக்க முடியாமல் திருப்பி அனுப்பினர்.
அவரை வேதாரண்யத்துக்கு அழைத்து வரும்போது மன்னார்குடி அருகே வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, சேதுசாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வி (45). இவர் கடந்த 9-ந்தேதி தனது மகள் சித்ராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அகஸ்தியன்பள்ளி மாரியப்பன் மனைவி வனிதா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்வி மீது மோதியதில் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார்.
அவருக்கு உள்ளுரிலேயே நாட்டு வைத்தியம் செய்துள்ளனர். இதில் செல்வி உடல்நிலை மோசமானதால் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை சிகிச்சை அளிக்க முடியாமல் திருப்பி அனுப்பினர்.
அவரை வேதாரண்யத்துக்கு அழைத்து வரும்போது மன்னார்குடி அருகே வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






