என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் கட்டணம் வசூல்: தனியார் பள்ளியை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறியல்
    X

    கூடுதல் கட்டணம் வசூல்: தனியார் பள்ளியை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறியல்

    தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர்.
    ஆலந்தூர்:

    கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கீழ்க்கட்டளை சந்திப்பு, மேடவாக்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த மறியலில் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×