என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கார் ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் காயம்
    X

    வேதாரண்யம் அருகே கார் ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் காயம்

    கோடியக்கரை அருகே கார் ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் காயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன், அவரது மனைவி சிவகாமி,. மற்றும் சம்பந்தம் ஆகியோர் திதி கொடுப்பதற்காக கோடியக்கரைக்கு காரில் சென்றனர். காரை கோட்டூரை சேர்ந்த தங்கவேல் மகன் குணசேகரன் (வயது 27) ஓட்டி வந்துள்ளார்.

    கார் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மருதூர் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்குள்ள மானங்கொண்டான் ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் உள்பட காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் குணசேகரன், சம்பந்தம் ஆகிய இருவருரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், சிவகாமி, கோவிந்தராஜன், விஸ்வநாதன் ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×