என் மலர்
செய்திகள்

அரச்சலூரில் அரசு பள்ளி வகுப்பறைக்கு தீ வைப்பு: புத்தகங்கள் எரிந்து சாம்பல்
அரச்சலூரில் அரசு பள்ளியில் புகுந்து வகுப்பறைக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரச்சலூர்:
ஈரோடு அருகே உள்ள அரச்சலூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 39 ஆண் குழந்தைகளும், 49 பெண் குழந்தைகளும்படித்து வருகிறார்கள்.
இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பள்ளி துப்புரவு ஆய்வாளர் மைதிலி பள்ளியை சுத்தம் செய்ய வந்தார். அப்போது பள்ளியில் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே செயல்வழி கற்றல் வகுப்பறையில் மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து வகுப்பறைக்கு தீ வைத்து உள்ளனர். இதில் அந்த வகுப்பறையில் உள்ள புத்தகங்கள், டேபிள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 10 ஆயிரம்.
உடனே இதுகுறித்து மைதிலி பள்ளி தலைமை ஆசிரியை சாமியாத்தாளிடம் தெரிவித்தார். அவரும் உடனே பள்ளிக்கு விரைந்து வந்து பார்த்தார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை சாமியாத்தாள் அரச்சலூர் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் வகுப்பறைக்கு தீ வைத்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு அருகே உள்ள அரச்சலூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 39 ஆண் குழந்தைகளும், 49 பெண் குழந்தைகளும்படித்து வருகிறார்கள்.
இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பள்ளி துப்புரவு ஆய்வாளர் மைதிலி பள்ளியை சுத்தம் செய்ய வந்தார். அப்போது பள்ளியில் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே செயல்வழி கற்றல் வகுப்பறையில் மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து வகுப்பறைக்கு தீ வைத்து உள்ளனர். இதில் அந்த வகுப்பறையில் உள்ள புத்தகங்கள், டேபிள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 10 ஆயிரம்.
உடனே இதுகுறித்து மைதிலி பள்ளி தலைமை ஆசிரியை சாமியாத்தாளிடம் தெரிவித்தார். அவரும் உடனே பள்ளிக்கு விரைந்து வந்து பார்த்தார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை சாமியாத்தாள் அரச்சலூர் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் வகுப்பறைக்கு தீ வைத்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






