என் மலர்
செய்திகள்

கர்நாடக லாரி என்று நினைத்து ஈரோட்டை சேர்ந்தவரின் லாரிக்கு தீவைத்த கும்பல்
கர்நாடக லாரி என்று நினைத்து ஈரோட்டை சேர்ந்தவரின் லாரிக்கு தீவைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.
இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழ்நாட்டில் இருந்து பஸ்கள்-லாரிகள் செல்லவில்லை. சரக்கு ஏற்றி சென்ற லாரிகளும் பண்ணாரி சோதனைசாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிரச்சினை சிறிது ஓய்ந்து இருந்ததால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் சரக்குகளை ஏற்றி சென்றன.
இந்த நிலையில் தமிழகத்துக்கு மேலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவில் மேலும் கலவரம் வெடித்தது. தமிழகத்தில் இருந்துசென்ற 42 பஸ்கள், 50 லாரிகளை கன்னட வெறியர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் கடந்த 2 நாட்களாக செல்லாமல் லாரி செட்டுகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன்படி ஈரோடு மூலப்பட்டறையில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த லாரி தீப்பிடித்து சேதம் அடைந்தது. மேலும் கர்நாடக பதிவு எண்கொண்ட 4 லாரிகள், மற்றும் மகராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு லாரியின் கண்ணாடிகளை தடியால் அடித்து அந்த கும்பல் உடைத்தது.
தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரிகள் அனைத்தும் ஈரோட்டை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிக்கு தீ வைத்து லாரி கண்ணாடிகளையும் உடைத்த கும்பலை தேடி வருகிறார்கள்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.
இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழ்நாட்டில் இருந்து பஸ்கள்-லாரிகள் செல்லவில்லை. சரக்கு ஏற்றி சென்ற லாரிகளும் பண்ணாரி சோதனைசாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிரச்சினை சிறிது ஓய்ந்து இருந்ததால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் சரக்குகளை ஏற்றி சென்றன.
இந்த நிலையில் தமிழகத்துக்கு மேலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவில் மேலும் கலவரம் வெடித்தது. தமிழகத்தில் இருந்துசென்ற 42 பஸ்கள், 50 லாரிகளை கன்னட வெறியர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் கடந்த 2 நாட்களாக செல்லாமல் லாரி செட்டுகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன்படி ஈரோடு மூலப்பட்டறையில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த லாரி தீப்பிடித்து சேதம் அடைந்தது. மேலும் கர்நாடக பதிவு எண்கொண்ட 4 லாரிகள், மற்றும் மகராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு லாரியின் கண்ணாடிகளை தடியால் அடித்து அந்த கும்பல் உடைத்தது.
தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரிகள் அனைத்தும் ஈரோட்டை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிக்கு தீ வைத்து லாரி கண்ணாடிகளையும் உடைத்த கும்பலை தேடி வருகிறார்கள்.
Next Story






