என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மணிமாறன் தலைமை தாங்கினார். குணசேகரன் வரவேற்று பேசினார். மாநில துனைத்தலைவர் டி.கணேசன், வி.நெடுமாறன், சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்டம் ஆர்க்காடு வட்டம் மாம்பாக்கம் சரகத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள் 2 பேர் கடந்த 9-ந்தேதி இரவு மணல் தடுப்பு நடவடிக்கைக்காக வட்டாச்சியரால் அழைத்துசெல்லப்பட்டு சாலைவிபத்தில் இறந்தனர்.
அவர்கள் இருவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் என்பவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
முடிவில் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மணிமாறன் தலைமை தாங்கினார். குணசேகரன் வரவேற்று பேசினார். மாநில துனைத்தலைவர் டி.கணேசன், வி.நெடுமாறன், சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்டம் ஆர்க்காடு வட்டம் மாம்பாக்கம் சரகத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள் 2 பேர் கடந்த 9-ந்தேதி இரவு மணல் தடுப்பு நடவடிக்கைக்காக வட்டாச்சியரால் அழைத்துசெல்லப்பட்டு சாலைவிபத்தில் இறந்தனர்.
அவர்கள் இருவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் என்பவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
முடிவில் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
Next Story






