என் மலர்
செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் விநாயகர் சிலையை உடைத்த 2 பேர் கைது
ஈரோடு கருங்கல்பாளையத்தில் விநாயகர் சிலையை உடைத்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் மதுரை வீரன் கோவில் தெருவில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை நேற்று மர்ம மனிதர்கள் உடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே நடந்த தகராறில் சிலை உடைக்கப்பட்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை உடைத்தவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு வீரப்பா வீதியை சேர்ந்த ராஜா (வயது 44), சேகர் (54) ஆகிய 2 பேரை சிலை உடைத்ததாக போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் மதுரை வீரன் கோவில் தெருவில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை நேற்று மர்ம மனிதர்கள் உடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே நடந்த தகராறில் சிலை உடைக்கப்பட்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை உடைத்தவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு வீரப்பா வீதியை சேர்ந்த ராஜா (வயது 44), சேகர் (54) ஆகிய 2 பேரை சிலை உடைத்ததாக போலீசார் கைது செய்தனர்.
Next Story






