என் மலர்
செய்திகள்

பெருந்துறை அருகே மகளிர் விடுதியில் இளம்பெண் தற்கொலை
பெருந்துறை அருகே மகளிர் விடுதியில் இளம்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே உள்ள ஆண்டிவயல் ராமர்மடம் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவரது மகள் சுமந்தா (வயது 19). இவர் கடந்த 4 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தனக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்தாராம். இந்த நிலையில் சுந்தா தனக்கு வயிறு வலிக்கிறது. நான் வேலைக்கு வரவில்லை. நீங்கள் போங்கள் என்று உடன் இருந்தவர்களை அனுப்பிவைத்து விட்டாராம். வேலைக்கு சென்றுவிட்டு மதியம் அறைக்கு பெண்கள் வந்தனர். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக போய் பார்த்தனர்.
அப்போது அங்கு சுமந்தா தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் விடுதி மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் பெருந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்.
அவர் பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட்ராஜ் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே உள்ள ஆண்டிவயல் ராமர்மடம் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவரது மகள் சுமந்தா (வயது 19). இவர் கடந்த 4 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தனக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்தாராம். இந்த நிலையில் சுந்தா தனக்கு வயிறு வலிக்கிறது. நான் வேலைக்கு வரவில்லை. நீங்கள் போங்கள் என்று உடன் இருந்தவர்களை அனுப்பிவைத்து விட்டாராம். வேலைக்கு சென்றுவிட்டு மதியம் அறைக்கு பெண்கள் வந்தனர். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக போய் பார்த்தனர்.
அப்போது அங்கு சுமந்தா தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் விடுதி மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் பெருந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்.
அவர் பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட்ராஜ் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






