என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே பள்ளி மாணவர்களுடன் வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து - 3 பேர் காயம்
    X

    குத்தாலம் அருகே பள்ளி மாணவர்களுடன் வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து - 3 பேர் காயம்

    குத்தாலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததால் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கைநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தனியார் வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை வந்து கொண்டிருந்தது. வேனில் 8 மற்றும் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 15 பேர் இருந்தனர்.

    காலை 9 மணிளவில் மங்கைநல்லூர் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.

    உடன் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று வேனில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேனை ஓட்டி வந்த கிளியனூரை சேர்ந்த அப்துல் ரகுமானிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் வாய்காலில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×