என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடியில் கோவிலுக்கு வந்தவர் சுருண்டு விழுந்து பலி
    X

    கொடுமுடியில் கோவிலுக்கு வந்தவர் சுருண்டு விழுந்து பலி

    கொடுமுடியில் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    கொடுமுடி கோவிலுக்கு நேற்று 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாமி கும்பிட வந்தார். அப்போது அவர் கோவிலின் வெளியே உள்ள வளாகத்தில் திடீர் என்று சுருண்டு விழுந்தார்.

    உடனே அவரை கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது பெயர் செல்வம் என்பதும் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×