என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் மாணவரின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.1 லட்சம் மோசடி: நண்பர் மீது புகார்
    X

    சிவகங்கையில் மாணவரின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.1 லட்சம் மோசடி: நண்பர் மீது புகார்

    மாணவரின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது19), மாணவர். இவரது நண்பர் சாஸ்திரி தெருவை சேர்ந்த வாணிகருப்பு (25). கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அவருடன் வாணிகருப்பும் சென்றார்.

    அதன் பிறகு ஏ.டி.எம். கார்டை பாலமுருகன் வீட்டில் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், ஏ.டி.எம். கார்டை தேடியபோது அது மாயமாகி இருந்தது.

    தொடர்ந்து விசாரித்த போது கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் எடுத்து மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்த பாலமுருகன், நண்பர் வாணிகருப்பு மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் அடைக்கலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×