என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மனைவிக்கு தெரியாமல் 2-ம் திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    முதல் மனைவிக்கு தெரியாமல் 2-ம் திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

    முதல் மனைவிக்கு தெரியாமல் மைனர் பெண்ணை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த வழக்கில், மகன் மற்றும் தந்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    அரியலூர்:

    முதல் மனைவிக்கு தெரியாமல் மைனர் பெண்ணை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த வழக்கில், மகன் மற்றும் தந்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் மகன் நடராஜன் (வயது 30). காண்டிராக்டரான இவருக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற 17 வயது சிறுமியை இரண்டாவதாக நடராஜன் திருமணம் செய்து கொண்டார்.

    இதற்கு நடராஜனின் தந்தை புஷ்பராஜூம் உடந்தையாக இருந்தார். இதையறிந்த நடராஜனின் முதல் மனைவி ராஜேஸ்வரி , கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி அரியலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பளித்தார். இதில் நடராஜன் மற்றும் அவரது தந்தை புஷ்பராஜ் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×