என் மலர்
செய்திகள்

கர்நாடகாவில் போராட்டம்: ஈரோடு மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
கர்நாடகா மாநிலத்தில் தொடரும் போராட்டம் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்ததுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் மாட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தையையொட்டி புதன்கிழமை இரவே மாடுகள் வந்துவிடும்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதிகாலை 4 மணிக்கு வியாபாரம் தொடங்கி பகல் 11 மணி வரை வியாபாரம் விறு,விறுப்பாக நடைபெறும்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக அந்த மாநிலத்தில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பை சேர்ந்தவர்களும் தெடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் இரு மாநிலத்துக்கும் போக்குவரத்து சீர்குலைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று ஈரோடு மாட்டுச் சந்தைகளை குறைந்து காணப்பட்டது. வழக்கம் போல் 550 பசுமாடுகள் வரும். ஆனால் இன்று நடந்த சந்தையில் 400 மாடுகள் வந்தன. ஒவ்வொரு மாடும் ரூ.16 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
450 எருமை மாடுகள் வரும் ஆனால் இன்று 350 மாடுகள் மட்டும் வந்திருந்தது. ஒரு எருமைமாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கன்று குட்டிகள் 400 வரும் இன்று 300 தான் வந்தன. ரூ.2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்கப்பட்டன.
இதனால் இந்த வாரம் 20 சதவிதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் மாட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தையையொட்டி புதன்கிழமை இரவே மாடுகள் வந்துவிடும்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதிகாலை 4 மணிக்கு வியாபாரம் தொடங்கி பகல் 11 மணி வரை வியாபாரம் விறு,விறுப்பாக நடைபெறும்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக அந்த மாநிலத்தில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பை சேர்ந்தவர்களும் தெடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் இரு மாநிலத்துக்கும் போக்குவரத்து சீர்குலைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று ஈரோடு மாட்டுச் சந்தைகளை குறைந்து காணப்பட்டது. வழக்கம் போல் 550 பசுமாடுகள் வரும். ஆனால் இன்று நடந்த சந்தையில் 400 மாடுகள் வந்தன. ஒவ்வொரு மாடும் ரூ.16 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
450 எருமை மாடுகள் வரும் ஆனால் இன்று 350 மாடுகள் மட்டும் வந்திருந்தது. ஒரு எருமைமாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கன்று குட்டிகள் 400 வரும் இன்று 300 தான் வந்தன. ரூ.2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்கப்பட்டன.
இதனால் இந்த வாரம் 20 சதவிதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story






