என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மொடக்குறிச்சி அருகே வேன் டிரைவர் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ஈரோடு:
குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுவலவு என்ற இடத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 23).
இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலத்து பாளையத்தில் 3 மாதமாக தங்கி வேன் டிரைவர் வேலை பார்த்து வந்தார்.
குளூர் ரோட்டில் தான் தங்கி இருந்த மாடி வீட்டில் சுரேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
மொடக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.
மேலும் அரசு ஆஸ்பத்திரி முன் கூடி சாலை மறியல் நடத்தவும் முயன்றனர். அப்போது போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘‘போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று போலீசார் தெரிவித்தனர். இதையொட்டி மறியலை கைவிட்டு உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்