என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    தா. பழூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தா.பழூர்

    தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காரைக்குறிச்சியில் இருந்து தனது சொந்த ஊரான சீனிவாசபுரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருகையூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (23) மோட்டார் சைக்கிளில் மதனத்தூரில் இருந்து காரைக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த ராஜ்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×