search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.83 ஆயிரம் திருட்டு
    X

    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.83 ஆயிரம் திருட்டு

    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.83 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தென்ன மரக்குடி தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 47).

    இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ரூ.83 ஆயிரம் எடுத்து வந்துள்ளார். கூறைநாடு பகுதி காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக். பள்ளி அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.83 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டு திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×