என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடையாறில் போலி சி.பி.ஐ. அதிகாரி கைது
    X

    அடையாறில் போலி சி.பி.ஐ. அதிகாரி கைது

    அடையாறில் போலி சி.பி.ஐ. அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    திருவான்மியூர்:

    அடையாறு எம்.ஐ.டி. பிளாக் 3-வது தெருவில் கெஸ்ட்ஹவுஸ் ஒன்று உள்ளது. இங்கு திருவான்மியூரை சேர்ந்த தாமோதரன் என்பவர் தங்கியிருந்தார். இந்த கெஸ்ட்ஹவுஸ் அருகே பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தாமோதரன் விடுதியின் பாத்ரூம் ஜன்னலில் செல்போன் வைத்து பெண்கள் குளிப்பதை ஆபாச படம் எடுத்தார். இதை பெண் ஒருவர் கவனித்துவிட்டார்.

    இதுகுறித்து அவரிடம் விடுதியில் தங்கிய பெண்கள் கேட்டபோது, ‘தான் சி.பி.ஐ. அதிகாரி’ என்று கூறி மிரட்டினார். இதையடுத்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் அந்த கெஸ்ட்ஹவுசுக்கு சென்றனர். அங்கு சிவப்பு விளக்கு பொருத்திய கார் ஒன்று நின்று இருந்தது. அதில் தமிழ்நாடு அரசு என்றும் எழுதி இருந்தது.

    தாமோதரனிடம் விசாரித்தபோது, ‘தான் சி.பி.ஐ. அதிகாரி’ என்று கூறி அடையாள அட்டையை போலீசாரிடம் காட்டினார். இதை போலீசார் ஆய்வு செய்தபோது அது போலி அடையாள அட்டை என்பது தெரிந்தது. மேலும் அவர் போலியான வக்கீல் அடையாள அட்டையும் வைத்து இருந்தார்.

    சிவப்பு விளக்கு பொருத்திய காரில் சென்று சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி பலரை மிரட்டி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து போலீசாரை தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று மிரட்டி இருப்பதும் தெரியவந்தது. தற்போது ஆபாச படம் எடுத்தபோது போலீசில் சிக்கி கொண்டார்.

    தாமோதரனை கைது செய்தபோது போலி அடையாள அட்டை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி யார்-யாரிடம் மிரட்டி பணம் வசூல் செய்து இருக்கிறார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×