என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் கணேஷ் ஆய்வு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல் படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் திருமயம் ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, கோட்டூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட பணியையும், ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் புதுக்கண்மாய் தூர்வாறும் பணியையும், பேரையூர் விளக்கு முதல் கோட்டையூர் விளக்கு வரை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பணியையும், கோட்டூர் சாலையில் ரூ.18.87 இலட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் விராச்சிலை ஊராட்சி, விராச்சிலையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட நிதியின் கீழ் ரூ.5.98 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணியையும், ஆதனூர் ஊராட்சி, ஆதனூரில் பிரதமமந்திரி அவா‘யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் பணியையும், அரண்மனைப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.25.62 இலட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள நாற்றங்கால் பணியையும் என மொத்தம் ரூ.92.17 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரோஜா, வேலு, வட்டாட்சியர் சார்லஸ், உதவிப் பொறியாளர்கள் ஆனந்த ராஜா, சேது, ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் குண்டுமணி, சிவசங்கரன், அறிவழகன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்