என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரி மனைவியை தாக்கி நகை கொள்ளை
Byமாலை மலர்7 Sep 2016 4:24 AM GMT (Updated: 7 Sep 2016 4:24 AM GMT)
தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். எலிசபெத் ராணி தனது மகள்களுடன் முள்ளிக்குண்டுவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகஸ்டின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று எலிசபெத் ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அகஸ்டின் வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் நுழைந்த 2 மர்ம ஆசாமிகள் எலிசபெத் ராணியை தாக்கினர்.
பின்னர் அரிவாளால் வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் வீடு திரும்பிய அகஸ்டின், மனைவி ரத்தக் காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். எலிசபெத் ராணி தனது மகள்களுடன் முள்ளிக்குண்டுவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகஸ்டின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று எலிசபெத் ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அகஸ்டின் வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் நுழைந்த 2 மர்ம ஆசாமிகள் எலிசபெத் ராணியை தாக்கினர்.
பின்னர் அரிவாளால் வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் வீடு திரும்பிய அகஸ்டின், மனைவி ரத்தக் காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X