search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மனைவி
    X
    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மனைவி

    தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரி மனைவியை தாக்கி நகை கொள்ளை

    தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். எலிசபெத் ராணி தனது மகள்களுடன் முள்ளிக்குண்டுவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகஸ்டின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று எலிசபெத் ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அகஸ்டின் வேலை வி‌ஷயமாக வெளியில் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் நுழைந்த 2 மர்ம ஆசாமிகள் எலிசபெத் ராணியை தாக்கினர்.

    பின்னர் அரிவாளால் வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் வீடு திரும்பிய அகஸ்டின், மனைவி ரத்தக் காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×