என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானி வராததால் மாலத்தீவு-அந்தமான் விமானங்கள் தாமதம்
    X

    விமானி வராததால் மாலத்தீவு-அந்தமான் விமானங்கள் தாமதம்

    விமானி வராததால் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படவில்லை. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு தாமதமாக 9.30 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் திருவனந்தபுரம் வழியாக மாலத்தீவுக்கு செல்லும் விமானம் புறப்பட இருந்தது.

    அதில் செல்ல வேண்டிய 142 பயணிகளும் ஏற தயாராக இருந்தனர். ஆனால் விமானத்தை இயக்கும் விமானி வரவில்லை.

    இதையடுத்து மாற்று விமானி வரவழைக்கப்பட்டார். பின்னர் 3 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி விமானம் புறப்பட்டு சென்றது.

    இதே போல் சென்னை உள்நாட்டு முனையத்தில் காலை 5 மணியளவில் அந்தமான் செல்லும் விமானம் தயாராக இருந்தது. அதில் 123 பயணிகள் செல்ல இருந்தனர்.

    விமானி வராததால் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படவில்லை. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு தாமதமாக 9.30 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    Next Story
    ×