என் மலர்
செய்திகள்

குடிப்பதை மறக்க முடியாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் காந்திமுருகன் (வயது34). இவரது மனைவி சுகுணா (31).
காந்திமுருகனுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. “போதைக்கு அடிமையாகி விடாதீர்கள் குடிப்பதை மறந்து குடும்பத்தை பாருங்கள்” என்று அவரது மனைவி சுகுணா அடிக்கடி கூறி வந்தாராம்.
மேலும் குடிப்பதை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறியும் வந்தாராம். எனினும் அவரால் குடிக்காமல் இருக்க முடிய வில்லை. இதனால் அவர் வேதனையில் இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி அவர் விஷம் மருந்தை எடுத்து குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2-ந் தேதி பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மனைவி சுகுணா கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.






