என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாளவாடி அருகே கர்நாடக மாநில மது விற்ற முதியவர் கைது
    X

    தாளவாடி அருகே கர்நாடக மாநில மது விற்ற முதியவர் கைது

    தாளவாடி அருகே கர்நாடக மாநில மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    தாளவாடி அருகே உள்ள திகினாரையை சேர்ந்தவர் ருமா சந்திரன் (வயது 65). இவர் திகினாரை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மது பாட்டில்களை விற்பனை செய்து கொண் டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி முதியவர் ருமாசந்திரனை கைது செய்தார். அவரிடம் இருந்து விஸ்கி பாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட ருமாசந்திரன் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இது குறித்துதாளவாடி போலீசார் கூறும் போது, தடை செய்யப்பட்ட கர்நாடகா மது பாட்டில்களையோ, மது பாக்கெட்டுகளையோ அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. ரோந்து வரும் போலீசார் அவர்களை கைது செய்து வழக்கு தொடருவார்கள் என்று கூறி உள்ளனர்.

    Next Story
    ×