என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
    X

    அந்தியூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

    அந்தியூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பர்கூர் மலை பகுதி ஈரெட்டி பகுதியை சேர்ந்தவர் ராயணன் (வயது 45). இவர் நேற்று இரவு தாமரைக் கரை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    ஒருவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருக்கிறார் என்ற ரகசிய தகவலின் பேரின் அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உத்தரவுப்படி பர்கூர் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் மாதேஸ்வரன், கண்ணன் உள்பட போலீசார் தாமரைக்கரை பகுதிக்கு சென்றனர்.

    அந்த பகுதியில் கஞ்சாவுடன் நின்று இருந்த ராயனை பிடித்து விசாரித்து சோதனை செய்தனர். அப்போது அவர் ஒரு கிலோ கஞ்சா வைதிருந்தது தெரிய வந்தது. போலீசார் கஞ்வை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    அவர் வைத்திருந்த கஞ்சாவின் மதிப்பு ஒரு லட்சம் என்றும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    Next Story
    ×