என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் நாடுதழுவிய பொதுவேலை நிறுத்தத்தில் பொதுசுகாதார தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரமும், குறைந்தபட்ச பென்சன் ரூ.9 ஆயிரமும் வழங்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேலாக பணிசெய்யும் ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பொதுசுகாதார தொழிலாளர் சங்கதலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தம்பிசிவம், சத்துணவு பணியாளர் சங்க பொறுப்பாளர் பிரான்சிஸ் லூயிஸ் ஆகியோர் பேசினர்.
நிர்வாகிகள் சிலம்பு செல்வி, கிருஷ்ணன், துரை, சுரேஷ், ஜெயா, லட்சுமி, சீதா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் விஜயகுமார் வரவேற்றார். முடிவில் சங்கத்துணைத்தலைவர் கொளஞ்சி நன்றி கூறினார்.






