என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே பள்ளி மாணவன் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
    X

    செந்துறை அருகே பள்ளி மாணவன் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

    செந்துறை அருகே பள்ளி மாணவன் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள காடூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி விருத்தாம்பாள். இவர்களது மகன் வேலுசாமி (வயது 15). செந்துறை அருகில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 23.08.2016 அன்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மதியம் 3 மணிக்கு பள்ளியை விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் விடுதிக்கு செல்லவில்லை இதுகுறித்து முருகானந்தத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் வேலுசாமியை காணவில்லை. இதுகுறித்து தாய் விருத்தாம்பாள் செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதன் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×