என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம்: 415 பேர் கைது
    X

    கடலூரில் தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம்: 415 பேர் கைது

    கடலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    மத்திய அரசை கண்டித்து 10 தொழிற் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி. ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தியது.

    பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அவர்களை போலீசார் ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடலூர் உழவர் சந்தை அருகே இன்று காலை அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த 315-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சக்குப்பத்தில் மறியல் செய்ய புறப்பட்டனர்.

    லாரன்ஸ் ரோடு பகுதியில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    Next Story
    ×