என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4,94,513 வாக்காளர்கள்: கலெக்டர் தகவல்
    X

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4,94,513 வாக்காளர்கள்: கலெக்டர் தகவல்

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4,94,513 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான வாக்காளர் வரைவு பட்டியல் 01.09.2016-ஆம் தேதி வெளியிடப்பட்டதின் அடிப்படையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 122538 ஆண் வாக்காளர்களும், 122734 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 245276 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 123508 ஆண் வாக்காளர்களும், 125729 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 249237 வாக்காளர்கள் உள்ளனர்.

    இம்மாவட்டத்தில் 246046 ஆண் வாக்காளர்களும், 248463 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 494513 வாக்காளர்கள் உள்ளனர். 01.09.2016 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சிறப்பு சுருக்க திருத்த காலமான 01.01.2017 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 01.09.2016 முதல் 30.09.2016 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பெறப்படும். மேலும் 10.09.2016 மற்றும் 24.09.2016 ஆகிய இரு தினங்கள் கிராம சபா அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும். 11.09.2016 மற்றும் 25.09.2016 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றைக் கண்டறிந்து தெரிவிக்கலாம்.

    எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் 01.09.2016 முதல் 30.09.2016 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×