என் மலர்

    செய்திகள்

    கோவையில் ஒரே நாளில் என்ஜினீயர் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    கோவையில் ஒரே நாளில் என்ஜினீயர் உள்பட 3 பேர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் ஒரே நாளில் என்ஜினீயர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் தரணிதரன்(வயது 25). என்ஜினீயர். இவர் வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    தரணிதரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு 2-வது வீதி விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் என்ற விஜய்(வயது 24). இவர் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஜஸ்டினுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் சரிவர வேலைக்கு செல்வது கிடையாது என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை புலியகுளம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி தமிழ்செல்வி(48). இவர் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×