என் மலர்
செய்திகள்

ஈரோடு நகரம் முழுவதும் இடி-மின்னலுடன் மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று மாவட்டத்தில் பரவலான மழை பெய்தாலும் ஈரோட்டில் அதிகசட்ச மழை பெய்தது.
ஈரோட்டில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடி-மின்னலுடன் பலமாக கொட்டியது.
சம்பத் நகர், திண்டல், வீரப்பன் சத்திரம், கருங்கல் பாளையம் மூலப்பாளையம் கொல்லம்பாளையம், நாடார் மேடு, மூலப்பாளையம், ஆணைக்கல் பாளையம் , வில்லரசம்பட்டி உள்பட நகரம் முழுவதும் மழை கொட்டியது.
இந்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு காந்திஜி ரோடு, நாச்சியப்பா வீதி, கொங்காளம்மன் கோவில் வீதி, மணிகூண்டு, பகுதி உள்பட முக்கிய வீதிகளில் மழை வெள்ளம் சீறி பாய்ந்து ஓடியது.
இதனால் ரோடுகளில் வாகனங்கள் தட்டு தடுமாறி சென்றன.மழையால் முழுவதும் நனைந்த இரு சக்கர வாகனங்கள் அப்படியே ஓடாமல் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பலர் தங்களது வண்டிகளை தள்ளி கொண்டு சென்றனர்.
ஈரோட்டில் அதிபட்சமாக 35 மி. மீட்டர் மழை பதிவாகி இருந்தது.மேலும் மற்ற பகுதிகளில் மழை பலமாக பெய்யவில்லை.
பவானி, கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், அத்தாணி, கீழ்வாணி, வெள்ளாள பாளையம்,கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழையால் வெப்பம் அடியோடு ஓய்ந்து குளிர் நிலவியது.






