என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் கோவில் குளத்தில் மூழ்கி இளைஞர் பலி
    X

    மயிலாடுதுறையில் கோவில் குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

    கோவில் குளத்தில் மூழ்கி இளைஞர் பலியானார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கோவில் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் சித்தாள். சம்பவத்தன்று இவரும், இவரது தம்பி விஷ்ணு இருவரும் காலையில் மயூரநாதர் கோவில் குளத்திற்கு குளிக்க சென்றனர். விஷ்ணுவுக்கு நீச்சல் தெரியும் ஆனால் அய்யப்பனுக்கு நீச்சல் தெரியாது. அப்போது அய்யப்பன் நீரில் மூழ்கி உள்ளார்.

    இதனால் விஷ்ணு சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி அய்யப்பனை மீட்டனர். உடனே சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×